×

திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் வெட்டிக்கொலை... போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூரில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் கிளி ஜோசியர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் குமரன் சாலையில் ராஜேஷ் என்பவர் கிளி ஜோசியம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. அவர் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் நடுரோட்டில் கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ரமேஷை வெட்டிக்  கொன்றார். இதில் ரமேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த பகுதியில் திருப்பூரின் வடக்கு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்பு இறந்த ரமேஷ் என்பவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார். தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம், கொலை செய்த நபர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kili Joshiar Vettikkalai ,Tirupur , Tirupur, kili josiar, vettikkal
× RELATED போலி ஆதார்: திருப்பூரில் 3 வங்கதேச இளைஞர்கள் கைது